states

img

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 15 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் கார்கோனில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று காலை கார்கோனில் இருந்து இந்தூருக்கு 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. தாசாங்கா பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். 
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;